தவாபுல் விதஃ
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.
மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை பைத்துல்லாவில் (தவாப்) செய்துவிட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா.
இந்தத் தவாபும் தவாபுல் இபாளாபை; போன்றே செய்யப்பட வேண்டும். இத்துடன் புறப்பட்டுச் சென்றுவிடலாம்.
வரிசையாக ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை இதுவரை நாம் அறிந்தோம். மக்காவில் அவர்கள் இருக்கும்போது செய்ய வேண்டிய வேறு சில காரியங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
தவாபின் போது பேசலாம்
தவாப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுவதில் ஈடுபட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.
“கஃபாவில் தவாப் செய்வது தொழுகையாகும். எனவே பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்பது நபிமொழி (நஸயீ)
எந்த நேரமும் தொழலாம், தவாப் செய்யலாம்
சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், உச்சிக்கு வரும் நேரம் ஆகிய நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரம் வேண்டுமானாலும் தொழலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் தவாப் செய்யலாம்.
“அப்து முனாபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்பவரையும் தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ
ஆண்களுடன் பெண்களும் தவாப் செய்வது
பெண்களும் ஆண்களுடன் தவாப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்துவிடாத வண்ணமாக அவர்கள் தவாப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாப் செய்ததாக புகாரியில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) ஹஜ் செய்த போது மக்களுக்குப் பின்னால் தவாப் செய்யுமாறு நபி (ஸல்) கூறியதாகவும் புகாரியில் காணப்படுகின்றது.
எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாப் செய்ய வேண்டும்.
அதிகமதிகம் தொழ வேண்டும்
மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.
“எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக உள்ள ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அதைவிட நூறு மடங்கு (அதாவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச்) சிறந்ததாகும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்கள் : அஹ்மத், இப்னு ஹிப்பான்.
ஒரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகைகளை விட அதிக நன்மை என்பது கிடைப்பதற்கரிய பாக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.
இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.
“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
அதிகமதிகம் தவாப் செய்ய வேண்டும்
இதுவரை மூன்று பெயர்களைக் கொண்ட தவாப்களைப் பற்றி நாம் அறிந்தோம். மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாபுல் குதூம் எனும் தவாப், பத்தாம் நாளன்று செய்யவேண்டிய தவாபுல் இபாளா அல்லது தவாபுஸ் ஸியாரா, மக்காவை விட்டும் ஊர் திரும்பும்போது கடைசியாகச் செய்யவேண்டிய ‘தவாபுல் விதாஃ’ ஆகியவற்றுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும், விரும்பிய நேரமெல்லாம் நபிலான-உபரியான-முறையில் தவாப் செய்யலாம்.
இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்யும் எவரையும் தடுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியதை முன்னர் நாம் அறிந்தோம்.
இந்த நபிமொழியிலிருந்து எந்த நேரமும் தவாப் செய்வதில் ஆர்வமூட்டியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.
மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை பைத்துல்லாவில் (தவாப்) செய்துவிட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா.
இந்தத் தவாபும் தவாபுல் இபாளாபை; போன்றே செய்யப்பட வேண்டும். இத்துடன் புறப்பட்டுச் சென்றுவிடலாம்.
வரிசையாக ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை இதுவரை நாம் அறிந்தோம். மக்காவில் அவர்கள் இருக்கும்போது செய்ய வேண்டிய வேறு சில காரியங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
தவாபின் போது பேசலாம்
தவாப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுவதில் ஈடுபட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.
“கஃபாவில் தவாப் செய்வது தொழுகையாகும். எனவே பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்பது நபிமொழி (நஸயீ)
எந்த நேரமும் தொழலாம், தவாப் செய்யலாம்
சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், உச்சிக்கு வரும் நேரம் ஆகிய நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரம் வேண்டுமானாலும் தொழலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் தவாப் செய்யலாம்.
“அப்து முனாபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்பவரையும் தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ
ஆண்களுடன் பெண்களும் தவாப் செய்வது
பெண்களும் ஆண்களுடன் தவாப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்துவிடாத வண்ணமாக அவர்கள் தவாப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாப் செய்ததாக புகாரியில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) ஹஜ் செய்த போது மக்களுக்குப் பின்னால் தவாப் செய்யுமாறு நபி (ஸல்) கூறியதாகவும் புகாரியில் காணப்படுகின்றது.
எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாப் செய்ய வேண்டும்.
அதிகமதிகம் தொழ வேண்டும்
மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.
“எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக உள்ள ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அதைவிட நூறு மடங்கு (அதாவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச்) சிறந்ததாகும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்கள் : அஹ்மத், இப்னு ஹிப்பான்.
ஒரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகைகளை விட அதிக நன்மை என்பது கிடைப்பதற்கரிய பாக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.
இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.
“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
அதிகமதிகம் தவாப் செய்ய வேண்டும்
இதுவரை மூன்று பெயர்களைக் கொண்ட தவாப்களைப் பற்றி நாம் அறிந்தோம். மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாபுல் குதூம் எனும் தவாப், பத்தாம் நாளன்று செய்யவேண்டிய தவாபுல் இபாளா அல்லது தவாபுஸ் ஸியாரா, மக்காவை விட்டும் ஊர் திரும்பும்போது கடைசியாகச் செய்யவேண்டிய ‘தவாபுல் விதாஃ’ ஆகியவற்றுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும், விரும்பிய நேரமெல்லாம் நபிலான-உபரியான-முறையில் தவாப் செய்யலாம்.
இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்யும் எவரையும் தடுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியதை முன்னர் நாம் அறிந்தோம்.
இந்த நபிமொழியிலிருந்து எந்த நேரமும் தவாப் செய்வதில் ஆர்வமூட்டியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக